லாரி மோதி ஒருவர் பலி

லாரி மோதி ஒருவர் பலி

லாரி மோதி பலி

தேனி மாவட்டம், பொம்மைய கவுண்டன்பட்டியில் லாரி மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம், பொம்மைய கவுண்டன்பட்டி சாலைப் பிள்ளையார் கோவில் அருகே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த கண்ணன் வி எம் சாவடி தெருவை சேர்ந்த மோகன் பாபு ஆகிய இருவரும் தேனியில் இருந்து அன்னஞ்சி விளக்கு நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர்.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஜெயபாண்டி என்பவர் லாரியை அதிவேகமாக ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.இருசக்கர வாகனத்தின் மீது மோதி மோகன் பாபு என்பவர் தலையில் ஏறி இறங்கியது .இதில் மோகன் பாபு சம்பவ இடத்திலேயே பலியானார் இந்த விபத்து குறித்து அல்லிநகரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story