பூந்தமல்லியில் 'ஸ்கூட்டரில் லாரி மோதி ஒருவர் பலி

பூந்தமல்லியில் ஸ்கூட்டரில் லாரி மோதி ஒருவர் பலி

பைல் படம்

பூந்தமல்லியில்,'ஸ்கூட்டர்' மீது லாரி மோதிய விபத்தில், ஓய்வுபெற்ற குதிரை பயிற்சியாளர் நேற்று பலியானார்.

பூந்தமல்லியில்,'ஸ்கூட்டர்' மீது லாரி மோதிய விபத்தில், ஓய்வுபெற்ற குதிரை பயிற்சியாளர் நேற்று பலியானார். சென்னை அருகே குன்றத்துார் அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்தவர் அலோசியஸ், 67. கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப்பில் குதிரை பயிற்சியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். குன்றத்துார் குமணன்சாவடி நெடுஞ்சாலையில் நேற்று மாலை, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் சென்றார்.

பூந்தமல்லி அருகே குமணன்சாவடி பகுதியை கடந்த போது, அந்த வழியே வேகமாக சென்ற கலவை கலக்கும் லாரி, இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அலோசியஸ், சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story