விவசாய நிலத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி

தேன்கனிக்கோட்டையில் விவசாய நிலத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட படிகநாளம் கிராம பகுதியில் சேர்ந்த சஞ்சீவ் 20 தகப்பனார் பெயர் கிருஷ்ணப்பா இவர் அவரது விவசாய நிலத்தில் டிராக்டர் மூலமாக விவசாயம் செய்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சஞ்சீவ் என்பவர் டிராக்டரில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அருகில் இருந்த நபர்கள் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது சம்பவம் சம்பந்தமாக தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Next Story