டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு

டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் உயிரிழப்பு காவல்துறை வழக்கு பதிவு.
கரூர் மாவட்டம், தென்னிலை காவல் எல்லைக்குட்பட்ட, புகலூர் தாலுகா, காரவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி வயது 53. இவர் பிப்ரவரி 11ஆம் தேதி காலை 10 மணி அளவில், முத்தூரிலிருந்து காரவள்ளி செல்லும் சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம், காரவள்ளி பகுதியில் உள்ள, ராஜேந்திரன் என்பவர் தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்திசையில் வேகமாக வந்த, அடையாளம் தெரியாத நான்கு சக்கர மோட்டார் வாகனம் ஒன்று, வேலுச்சாமி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விட்டு, மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் வேலுச்சாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த வேலுச்சாமியின் மனைவி பூங்கொடி வயது 43 என்பவர், இது குறித்து தென்னிலை காவல் துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த வேலுச்சாமியின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, உயிரிழப்பு ஏற்படும் வகையில் விபத்து ஏற்படுத்தி விட்டு, மின்னல் வேகத்தில் சென்ற அந்த வாகனம் எது? வாகனத்தின் ஓட்டுனர் யார்? என்று கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தென்னிலை காவல்துறையினர்.

Tags

Next Story