ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல்

பெரம்பலூரில் ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ஒரு லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, பணம் பொருட்கள் ஏதும் எடுத்துச் செல்லப்படுகிறது என தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர், இந்நிலையில், தோட்டக்கலை அலுவலர் மாலதி, தலைமையில் காவலர்கள் பாஸ்கர், பாரதிராஜா, ஆகியோர் அடங்கிய பறக்கும் படை குழுவினர், அகரம்சீகூர் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அப்போது அங்கு வந்த திட்டக்குடியைச் சேர்ந்த முருகேசன் மகன் சிவகுமார் என்பவர் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை குழுவினர், பறிமுதல் செய்தனர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை குன்னம் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story