சித்தேரி அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

சித்தேரி அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

தலைமை மருத்துவமனை

அன்வர்த்திகான் பேட்டை- சித்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அன்வர்த்திகான் பேட்டை- சித்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் சித்தேரி ரயில் நிலைய மேலாளர் பவன்குமார் புகார் அளித்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் புஷ்பா வழக்குப்பதிவு செய்து,

பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.இறந்து கிடந்தவருக்கு 40 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊர் என்பது தெரிய வில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story