ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது வலிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழப்பு

ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது வலிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழப்பு
ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது வலிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம், பாக்கம் ஏரியில் மீன்பிடிக்க சென்றவர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் காவல் எல்லைக்கு உட்பட்ட பாக்கம் கிராமத்தின் ஏரியில், ஆண் உடல் மிதப்பதாக, மதுராந்தகம் போலீசாருக்கு, அப்பகுதிவாசிகள் தகவல் அளித்தனர். அதன்படி, அப்பகுதிக்குச் சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். விசாரணையில், இறந்தவர், பாக்கம் அருகே உள்ள புலிக்கொரடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு, 50, என்பது தெரிய வந்தது.

நேற்று இவர், பாக்கம் ஏரியில் துாண்டில் போட்டு மீன் பிடிக்கச் சென்றதும், அப்போது கடுமையான வெயில் காரணமாக அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, ஏரி நீரில் மூழ்கி இறந்ததும் தெரிய வந்தது என, மதுராந்தகம் போலீசார் தெரிவித்தனர். பின், உடற்கூறாய்வு முடிந்து, பாலுவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின், போலீசார் வழக்கு பதிவு செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story