சாலை விபத்தில் ஒருவர் பலி - இருவர் மருத்துவமனையில் அனுமதி

சாலை விபத்தில் ஒருவர் பலி - இருவர் மருத்துவமனையில் அனுமதி
விபத்தில் ஒருவர் பலி
இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை அருகே உள்ள பில்லத்தி கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மகன்கள் ராஜா (வயது 19), திவாகரன் (வயது 15), மற்றும் விளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தவமணி மகன் அய்யனார் (வயது 15), 3 பேரும் டூவீலரில் சிவகங்கை ரோட்டில் சென்ற போது பிராந்தமங்கலம் அருகே எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மரத்தின் மீது மோதியதில் 3 பேரும் காயமடைந்தனர்‌. இதில் திவாகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story