கார் லாரி மீது மோதிய விபத்தில் ஒருவர் பலி

கார் லாரி மீது மோதிய விபத்தில் ஒருவர் பலி

விபத்து 

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் கார் லாரி மீது மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் மேலவலம்பேட்டை என்ற இடத்தில் சென்னை கொளத்தூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைத் தடுமாறு எதிரே உள்ள திருச்சி - சென்னை சாலையில் சென்ற டிப்பர் லாரி மீது மோதியதில் காரில் வந்த பெண் உள்பட நான்கு பேரில் கொளத்தூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவர் சம்பவ இடத்தில் பலியானார்.

மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Tags

Next Story