சங்கிலிவாடி கார் விபத்தில் ஒருவர் பலி

சங்கிலிவாடி கார் விபத்தில் ஒருவர் பலி

விபத்து 

அரூர் சங்கிலிவாடி அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு ஆறு பேர் காயம்

ஈரோடு மாவட்டத்தை சார்ந்த ராமகிருஷ்ணன் அவரது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று விட்டு நேற்று மாலை சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கிலிவாடி அருகே உள்ள சாலையில் ஓட்டுநர் கட்டுப்பாட்டில் இருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவற்றில் மோதி விபத்திற்குள்ளானது.

இதில் ரேவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story