கிரேன் வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி

கிரேன் வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி

கிரேன் வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி

செங்கல்பட்டு மாவட்டம், அடையாளச்சேரி, கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் நடந்து சென்றவர் மீது கிரேன் மோதியதால் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம்,கூவத்துார் அருகே அடையாளச்சேரியைச் சேர்ந்தவர் மணி, 40; தோட்ட வேலை செய்து வந்தார். நேற்று அடையாளச்சேரி, கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் சென்ற கிரேன் மணியின் பின்புறத்தில் மோதியதால், மணி சாலையில் தவறி விழுந்தார். இதில், கிரேன் வாகனத்தின் முன்புற சக்கரம் மணியின் தலை மீது ஏறி இறங்கியது.

இதில், மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையறிந்த கிரேன் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினார். தகவல் அறிந்து வந்த கூவத்துார் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், கிரேன் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு சொந்தமான கிரேன் என்பது தெரியவந்துள்ளது என, போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story