விபத்தில் ஒருவர் பலி!

விபத்தில் ஒருவர் பலி!

பைல் படம்

ஸ்ரீவைகுண்டம் அருகே பாலத்தின் தடுப்புச்சுவரில் பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் திருமலை நம்பி (52). இவர் நேற்று அத்திக்குளம் அருகே பைக்கில் சென்றபோது அங்குள்ள பாலத்தின் தடுப்புச்சுவரில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரடுகிறார்.

Tags

Next Story