காசிபாளையம் அருகே சரக்கு வேன் மொபட் மீது ஒருவர் பலி

காசிபாளையம் அருகே சரக்கு வேன் மொபட் மீது ஒருவர் பலி

காவல் நிலையம்

திருப்பூர், நல்லூர், காசிபாளையம் அருகே சரக்கு வேன் மொபட் மீது மோதியதில் ஒருவர் பலியானார்.

திருப்பூர், ராக்கியாபாளையம் ஜெய் நகரை சேர்ந்தவர் உமாசங்கர் (43). வாட்ச்மேனாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று நல்லுாரிலிருந்து மொபட் வாகனத்தில் காசிபாளையம் ரோட்டின் வழியாக சென்றுள்ளார்.

அவ்வழியாக வந்த சரக்கு வேன் மொபட் மீது மோதியது. படுகாயமடைந்த அவர் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

விபத்து குறித்து நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story