இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் ஒருவர் காயம்
![இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் ஒருவர் காயம் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் ஒருவர் காயம்](https://king24x7.com/h-upload/2024/05/05/500477-1000000524.webp)
விருதுநகர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் ஒருவர் காயம் அடைந்தை அடுத்து காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியைச் சார்ந்தவர் நாகூர் கணிப்பா வயது 44 இவர் எட்டூர் வட்டம் பகுதியில் தனியார் உணவகம் ஒன்றில் டீ மாஸ்டராக வேலை செய்து வருவதாகவும் இவர் தனது இருசக்கர வாகனத்தில் விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது மதுரையைச் சார்ந்த பூமிநாதன் என்பவர் ஓட்டி வந்த கார் நாகூர் ஹனிபா ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் நாகூர் ஹனிபா காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சிகிச்சைக்காக விருதுநகர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்