அதிரடி சோதனையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை ஒருவர் கைது - 21. கிலோ பறிமுதல்

அதிரடி சோதனையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை ஒருவர் கைது - 21. கிலோ பறிமுதல்

கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை ஒருவர் கைது 

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், உத்தரவின் பேரில் தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை குற்றத்தில் ஈடுபட்ட நபர் அதிரடி கைது. சுமார் 21 கிலோ கஞ்சா பறிமுதல்...
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் திருக்கண்ணபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அண்ணா மண்டபம் பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை குற்றத்தில் ஈடுபட்ட திருக்கண்ணபுரம் போலகம் ராஜ் மகன் பாஸ்கரன்(51), என்ற நபரை கைது செய்தும் அவர்களிடமிருந்து சுமார் 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர். மேலும் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள். மேலும் இது போன்ற கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை, கடத்தல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.

Tags

Next Story