சரக்கு வாகன மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

சரக்கு வாகன மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

காவல் நிலையம் 

திருமயம் அருகே சரக்கு வாகன மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

திருமயம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருமயம் கடைவீதியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் வயது 41 கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது நமுணச் சமுத்திரம் பகுதியை சேர்ந்த பாலா என்கின்ற பாலசுப்பிரமணியன் ஓட்டி வந்த டாடா 407 பால் வண்டி எதிர்பாராத விதமாக சாலையில் நடந்து சென்ற ரமேஷ் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ரமேஷ் படுகாயம் அடைந்து திருமயம் அரசு மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைக்காக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்துக் குறித்து திருமயம் காவல்துறையின் உதவி ஆய்வாளர் ராசு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story