ஒருதலை காதல்: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

ஒருதலை காதல்: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

கோப்பு படம் 

கோவை அருகே ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுனரான மைக்கேல்ராஜ் சூலூர் அருகில் பள்ளபாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவரது மகன் முருகேசன்(20) சூலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.டெக்.படித்து வருகிறார்.

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்ற நிலையில் மைகேல்ராஜூம் அவரது மகனும் மட்டும் கோவை திரும்பி உள்ளனர்.

சம்பவத்தன்று திருப்பூருக்கு வேலை நிமித்தமாக மைக்கேல்ராஜ் சென்ற நிலையில் மகனை அலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார்.தொடர்ந்து போன் எடுக்கபடாத காரணமாக வீட்டின் அருகில் வசிப்பவரை தொடர்பு கொண்டு மகன் குறித்து தகவல் அளிக்க கூறியுள்ளார்.

வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டபட்டு இருந்த நிலையில் ஜன்னல் வழியாக பார்த்தபோது முருகேசன் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து மைக்கேல்ராஜூவிற்கு தகவல் அளித்துள்ளார். உடனடியாக வீட்டிற்கு வந்த மைக்கேல்ராஜ் வீட்டின் கதவை உடைத்து முருகேசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த சூலூர் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாகவும் காதல் கைகூடாத நிலையில் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.காதல் விவகாரம் தான் தற்கொலைக்கு காரணமாக அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story