ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான வாலிபர் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான வாலிபர் தற்கொலை

தற்கொலை

செங்கம் அருகே ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியேரி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(28). இவருக்கு திருமணமாகி ரவீனா என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் பாலமுருகன் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பெரியேரி வனப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து செங்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story