இணையதளத்தில் கையெழுத்துப் போட்டி: அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்

இணையதளத்தில் கையெழுத்துப் போட்டி:  அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்

அசத்திய மாணவர்கள்

பேராவூரணியில் இணையதளத்தில் நடைபெற்ற கையெழுத்துப் போட்டியில் அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தினர்.

தமிழ் வெற்றி டாட் காம் இணையதளம் நடத்திய அழகு கையெழுத்து போட்டியில், வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. டெலிகிராம் குழுவின் மூலமாக www.tamilvetri.com இணையதளம், மாணவர்களுக்கான அழகு கையெழுத்துப் போட்டியை அறிவித்தது.

மாணவர்களின் கையெழுத்து திறனை ஊக்கப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட அழகு கையெழுத்துப் போட்டியில், பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், முதல் வகுப்பு த.அனுஹாஷினி, இரண்டாம் வகுப்பு வை. ஹரிகரன்,

நீ.லோகிதா, வி.ஐனிக் பிரேமா, வெ.மகிழினி, மூன்றாம் வகுப்பு கா.ஜுவைரியா, ம.பாவனா ஸ்ரீ, நான்காம் வகுப்பு த.தர்ஷினி, ச.மது வர்ஷா, நீ.ஹரிபூரணி, ஐந்தாம் வகுப்பு க.பூவிகா, சோ.குபேரன், நிரஞ்சனா, ரோஷன், ம.ஆதவன் ஆகிய 15 பேர், சிறந்த அழகு கையெழுத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் www.tamilvetri.com இணையதளத்திலிருந்து எவர்சில்வர் தட்டு, பேனா என பரிசுகள் அனுப்பப்பட்டு, பள்ளியில் மாணவர்களிடம் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து

கொள்ள மாணவர்களை ஊக்கப்படுத்திய பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்ரா தேவி, உதவி ஆசிரியர்கள் ஹாஜாமொய்தீன், ரேணுகா ஆகியோருக்கும், போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், தகுதிப்படுத்திய பெற்றோர்களுக்கும், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கௌதமன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ஜசீரா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story