பாதியளவு மட்டுமே வந்த நிவாரண பொருட்கள் - மக்கள் முற்றுகை

பாதியளவு மட்டுமே வந்த நிவாரண பொருட்கள் - மக்கள் முற்றுகை

கிராம மக்கள் முற்றுகை 

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி பஞ்சாயத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களாக 500 போர்வைகள் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு லாரி மூலம் வந்து இறங்கியது. இந்த நிலையில் சீவலப்பேரி பஞ்சாயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் 500 போர்வைகள் மட்டுமே வந்துள்ள நிலையில் இதனை யாருக்கும் கொடுக்க கூடாது என சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story