நமக்கு நாமே திட்டத்தில் புதிய நியாயவிலைக்கடை திறப்பு

திருப்பூரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய நியாயவிலைக்கடை திறக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி மண்டலம் -1, 23-வது வார்டு , வளையங்காடு வ.ஊ.சி நகர் பகுதியில், "நமக்கு நாமே திட்டத்தின்" கீழ் பொதுமக்கள் பங்களிப்பு ரூ.3.25 லட்சம் உதவிதொகையுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் , துணை மேயர் பாலசுப்ரமணியம் ,1-வது மண்டல தலைவர்உமாமகேஸ்வரிவெங்கடாஜலம் , பகுதி கழகச் செயலாளர் மின்னல் நாகராஜ் , மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பத்மாவதி, துளசி மணி நடராஜன் , வட்ட கழக செயலாளர் குணராஜ், செல்வம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story