காஞ்சியில் திறந்து கிடக்கும் மழைநீர் வடிகால்வாய்

காஞ்சியில் திறந்து கிடக்கும் மழைநீர் வடிகால்வாயால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் புதுப்பாளையம் தெருவில் இருந்து, பல்லவர்மேடு மேற்கு பகுதிக்கு செல்லும் சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், புதுப்பாளையம் மாநகராட்சி துவக்கப் பள்ளி அருகில் கால்வாய் மீது மூடப்பட்டுள்ள 'கான்கிரீட்' மேல் தளம் மூன்று இடங்களில் உடைந்து கால்வாய் திறந்து கிடக்கிறது.

சாலையின் தரைமட்டத்தில் கால்வாய் திறந்து கிடப்பதால், இரவு நேரத்தில் இச்சாலையோரம் செல்லும் நாய், பூனை, ஆடு உள்ளிட்ட விலங்குகள் மட்டுமன்றி இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, சேதமடைந்த கால்வாய் தளத்தை சிமென்ட் சிலாப் வாயிலாக மூடி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்"

Tags

Next Story