4 புதிய மின்மாற்றிகள் திறந்து வைப்பு !

4 புதிய மின்மாற்றிகள் திறந்து வைப்பு !

மின்மாற்றி

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் 4 புதிய மின்மாற்றிகள் திறந்து வைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகை மாவட்டம் திருமருகல் மெயின்ரோடு, ஆற்றங்கரை தெரு, மேலிருப்பு பகுதிகளில் மின் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் ராஜேஸ் முத்தையா முன்னிலை வகித்து புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருமருகல் இளமின் பொறியாளர் சதீஸ், வர்த்தக சங்க தலைவர் ஜெயபாலசங்கர், முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் லெட்சுமணன், மின் ஊழியர் பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.அதேபோல் திருக்கண்ணபுரம் ஊராட்சி காக்கா கோட்டூர், ஆதலையூர் ஊராட்சி கீரங்குடி பகுதிகளிலும் புதிய மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் முத்தையா திறந்து வைத்தார்.

Tags

Next Story