பாஜக சார்பில் பொதுமக்களிடம் நேரடி ஆலோசனைகள் பெறும் பெட்டி திறப்பு

பாஜக சார்பில் பொதுமக்களிடம் நேரடி ஆலோசனைகள் பெறும் பெட்டி திறப்பு

ஆலோசனை பெட்டி திறப்பு

நாகை மாவட்டம் திருமருகலில் பாஜக சார்பில் பொதுமக்களிடம் நேரடி ஆலோசனைகள் பெறும் பெட்டி திறப்பட்டது.

நாகை மாவட்டம், திருமருகல் பஸ் நிலையத்தில் பாஜக சார்பில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக ஆலோசனைகள் பெறும் வகையில் வளர்ச்சி அடைந்த பாரதம் மோடியின் உத்தரவாதம் என்ற பெயரில் ஆலோசனை பெட்டி திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் நேதாஜி கலந்துகொண்டு பொதுமக்களிடம் ஆலோசனைகள் பெறும் விண்ணப்பங்களை வழங்கி அதனை பூர்த்தி செய்த பிறகு பெட்டியில் செலுத்த அறிவுறுத்தினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் விஜயராஜ், விஜயேந்திரன்,மகளிர் அணி மாவட்ட தலைவர் அன்னாராணி,நெசவாளர் பிரிவு மாவட்டத் தலைவர் பக்கிரிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் திருமருகல் மெயின் ரோடு,சந்தப்பேட்டை கடைத்தெரு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்து பிறகு பெட்டியில் பெறப்பட்டன.

Tags

Next Story