தேவிமங்கலம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

தேவிமங்கலம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடத்தை ஊராட்சி மன்ற தலைவர் திறந்து வைத்தார்.

சேத்துப்பட்டு அடுத்த தேவி மங்கலம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடத்தை ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி சுப்ரமணி திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் தேவி மங்கலம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் புனரமைக்கப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி சுப்ரமணியன் திறந்து வைத்து,

குத்து விளக்கு ஏற்றி,சிறப்பு பூஜை செய்தார். அதனை தொடர்ந்து அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது .இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ,உறுப்பினர்கள், அங்கன்வாடி மைய ஊழியர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story