குமாரபாளையத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு

குமாரபாளையத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு

திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் 

குமாரபாளையத்தில் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழாவில் நகர மன்ற தலைவர் பங்கேற்றார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் ரூ. 3,லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நகர மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி . வேல்முருகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு நகர திமுக பொறுப்பாளர் நகர மன்ற தலைவர் விஜய் கண்ணன். புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து, அங்கு பயிலும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். நகர மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன்,நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன்,

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வித்ய லட்சுமி, நகர மன்ற உறுப்பினர் ஜேம்ஸ, பொறுப்பு குழு உறுப்பினர் ராஜ்குமார், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், வார்டு செயலாளர் கோவிந்தன் மற்றும் விக்னேஷ், மகளிர் அணி ஜோதி அங்கன்வாடி பணியாளர்கள் குணசுந்தரி, விஜயா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story