தென்காசி அருகே அங்கன்வாடி மையம் திறப்பு

தென்காசி அருகே அங்கன்வாடி மையம் திறப்பு
 திறப்பு விழா 
தென்காசி அருகே காவலாகுறிச்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி திறப்பு விழாவில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் காவலாகுறிச்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.12.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சுரேஷ், துணை தலைவர் செல்வராஜ், காவலாகுறிச்சி ஒன்றிய குழு உறுப்பினர் முருகேஸ்வரி பாலகுமார், கிளை கழக செயலாளர்கள். ரவிச்சந்திரன் மற்றும் துரைராஜ், உள்ளிட்ட ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story