புதுகையில் பிஎன்ஐ கிளை தொடக்கம்

புதுகையில் பிஎன்ஐ கிளை தொடக்கம்

பிசினஸ் நெட்வொர்க்கிங் இன்டர்நேஷனல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில் மேம்பாட்டுக்காக சர்வதேச வியாபாரிகளை உள்ளடக்கிய பிஎன்ஐ கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. பிசினஸ் நெட்வொர்க்கிங் இன்டர்நேஷனல் (பிஎன்ஐ) என்ற இந்த அமைப்பு உலகின் 80 நாடுகளில் உள்ளது. புதுக்கோட்டையில் இந்த அமைப்பை தொடங்க இயக்குனர்களாக முகமது யூசுப், சையத் சாகிப், நவாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பிஎன்ஐ அமைப்பின் புதுக்கோட்டை தலைவராக அப்துல் ரகுமான், துணைத் தலைவராக டாக்டர் உதயசூரியன், செயலர் பொருளாளராக கலைவாணி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்த சந்திப்பு குறித்து முதுநிலை இயக்குனர்களான ஹபீஸ் பாஷா ஜாகிர் அகமது கூறியது உலகின் பல நாடுகளின் 38 ஆண்டுகளாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் சிறு குறு வணிகர்கள் முதல் பெரு வணிகர்களும் உறுப்பினர்களாக இணையலாம். புதுக்கோட்டையில் 55 உறுப்பினர்களைக் கொண்ட முதல் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இதில் வணிகர்கள் வியாபாரத்தை விரிவு படுத்துவது குறித்து ஆலோசனை அனுபவங்களை பகிர்ந்து கொள்வர். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை இந்த சந்திப்பு நடத்தப்படும் புதுக்கோட்டை வியாபாரிகளின் தொழில் வளர்ச்சிக்கு இந்த அமைப்பு பெரும் பங்காற்றும் என்றனர். இந்த சந்திப்பில் உறுப்பினர்கள் 55 பேர் பிற வியாபார பார்வையாளர்களாக 65 பேர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story