சமுதாய நலக்கூடம் திறப்பு

சமுதாய நலக்கூடம் திறப்பு
கணியாங்குளத்தில் சமூக நலக்கூடம் திறந்த  வைத்த எம்.பி., விஜய்வசந்த்.
புத்தேரி ஆனைபொத்தை கிராமத்தில் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய நல கூட திறப்பு விழா நடந்தது.

கன்னியாகுமரி மாவட்டம், கணியாகுளம் ஊராட்சி 3வது வார்டுக்குட்பட்ட புத்தேரி ஆனைபொத்தை கிராமத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டிடம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கணியாகுளம் ஊராட்சி மன்ற தலைவர் ஏஞ்சலின் ஷரோனா தலைமை வகித்தார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் செல்வகுமார், வட்டார தலைவர் முருகேசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கியராஜன், ஆனைபொத்தை ஊர் தலைவர் மகேஷ், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story