ராயப்பனூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

ராயப்பனூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திறப்பு விழா 

சின்னசேலம் அருகே ராயப்பனுாரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
சின்னசேலம் அடுத்த ராயப்பனுார் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது. நுகர்பொருள் வாணிபக் கழக மேற்பார்வையாளர் கார்த்திக், மாவட்ட கவுன்சிலர் கலையரசி முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் தங்கம் சாமிநாதன் வரவேற்றார். விழாவிற்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி, அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், முன்பதிவு செய்து அறுவடை செய்த நெல் மூட்டைகளை இங்கு விற்பனை செய்து பயனடையலாம். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சுதா மணிகண்டன், தி.மு.க., ஒன்றிய துணைச் செயலாளர் கண்ரோஸ், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, கிளைச் செயலாளர்கள் பாலன், தனபால், வேலு, சுக்கிரன், பெருமாள், வரதன், ஆறுமுகம், பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story