ஆலங்குளம் எம்எல்ஏ அலுவலகத்தில் இலவச இ-சேவை மையம் திறப்பு

ஆலங்குளம் எம்எல்ஏ அலுவலகத்தில் இலவச இ-சேவை மையம் திறப்பு

இ சேவை மையம்

எம்எல்ஏ அலுவலகத்தில் இலவச இ-சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் இலவச இ-சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தலைமை வகித்து, இ-சேவை மையத்தைத் திறந்துவைத்தாா்.

அப்போது அவா் கூறுகையில், பொதுமக்கள், இ-சேவைமையத்தை கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம். சான்றிதழ்களுக்கு அளிக்க வேண்டிய தொகையை நானே செலுத்தி விடுகிறேன் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், ஓபிஎஸ் அணி மாநில அமைப்புச் செயலா் ராதா, மாவட்ட ச்செயலா் கணபதி, அண்ணா தொழிற்சங்க செயலா் சோ்மதுரை, நகரச் செயலா் சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றியச் செயலா் செல்லத்துரை, கணேசன், அருண்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags

Next Story