புதிய பேருந்து நிலையம் திறப்பு

புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் ஆபத்தான நிலையில் இருந்த அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை அப்புறப்படுத்தி புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி ரூ174.50 இலட்சம் மதீப்பீட்டில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் மற்றும் தகர ஷெட் அமைக்கும் பணி நடைபெற்றது. தற்போது பேருந்து நிலைய பணிகள் முழுமையடைந்த நிலையில் இன்று பேருந்து நிலையத்தை நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அமைச்சர் கே.என்.நேருவை வரவேற்க்கும் விதமாக கட்சி நிர்வாகிகள் செண்டை மேளம் முழங்க பொன்னாடை போர்த்தி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

மேலும் இவ்விழாவில் ஏழை எளிய சிறுபான்மை பெண்கள் 40 பேருக்கு இலவச தையல் மிஷினை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். உடன் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சி.வ.வீ.மெய்யநாதன் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story