சுரண்டையில் புதிய பூங்கா திறப்பு

சுரண்டையில் புதிய பூங்கா திறப்பு
சுரண்டையில் புதிய பூங்காவை எம்எல்ஏ திறந்து வைத்தார்
தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவை நகர்மன்ற தலைவர் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சுரண்டை நகராட்சியில் ரூ. 47 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். ஆணையா் (பொ) ரவிச்சந்திரன், துணைத் தலைவா் சங்கராதேவி முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் ஆகியோா் புதிய பூங்காவைத் திறந்துவைத்தனா். விழாவில், நகராட்சிப் பொறியாளா் முகைதீன், மேலாளா் வெங்கடசுப்பிரமணியன், கணக்காளா் முருகன், நகா்மன்ற உறுப்பினா்கள் சந்திரசேகர அருணகிரி, பாலசுப்பிரமணியன், பரமசிவன், ராஜ்குமாா், வேல்முத்து, மாரியப்பன், ராஜேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Tags

Next Story