நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருமயம் அருகே கடியாபட்டியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.
திருமயம் தாலுகா கடியாபட்டியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது. ஊராட்சித்தலைவர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பொன்.ராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலா வரவேற்றார். நெல் கொள்முதல் நிலையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். நிகழ்ச் சியில் நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் சீதாராமன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் கலைவாணி மற் றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி துணைத்தலைவர் போஸ் நன்றி கூறினார்.

Tags

Next Story