ரங்கசாமி குளம் அருகே எம்பி மேம்பாட்டு நிதியில் பயணியர் நிழற்குடை திறப்பு

ரங்கசாமி குளம் அருகே எம்பி மேம்பாட்டு நிதியில் பயணியர் நிழற்குடை திறப்பு

பேருந்து நிலையம் திறப்பு

ரங்கசாமி குளம் அருகே ரூபாய் பத்து லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிழற்குடை அமைத்து பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், ரங்கசாமி குளம் அருகே ரூபாய் பத்து லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிழற்குடை அமைத்து பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த பேருந்து நிழற்குடையில் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்ட இருக்கைகள்,

கோடைகாலத்திற்கு மின்விசிறிகள், திடீர் விபத்துக்களுக்கு முதலுதவி பெட்டி போன்ற நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பேருந்து நிலையத்தில் மூன்று திருக்குறள்கள் எழுதப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் பேசுகையில், "பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ரங்கசாமி குளம் அருகே நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இந்த பகுதியில் பயணிக்கும் பயணிகள், வசதியாக காத்திருந்து பேருந்துகளை ஏற முடியும். மேலும், திருக்குறள்களை எழுதி வைப்பதன் மூலம்,

நம் பாரம்பரியத்தை இளைய தலைமுறைக்கு எடுத்து செல்ல முடியும்" என்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், ஏழிலரசன், மேயர் மகாலட்சுமி, துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோர் பேருந்து நிழற்குடை திறப்பு விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story