பெரியநாயகிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு 

பெரியநாயகிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு 

பெரியநாயகிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு 

பேராவூரணி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்து சிறப்பித்துள்ளார். இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள, பெரியநாயகிபுரம் ஊராட்சி ஆவணத்தில், புதன்கிழமையன்று, தேசிய ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சி நிதியின் கீழ் ரூ.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை, சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் திறந்து வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் வத்சலா முத்துராமன் வரவேற்றார். இந்நிகழ்வில், திமுக பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இலக்கியா நெப்போலியன், ஊராட்சி உறுப்பினர் ஜெயராமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொய்யாமொழி, தவமணி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story