கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் திறப்பு

அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு மைதானத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் ஆனந்தம் அம்மாள் அறக்கட்டளை சார்பில் மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்காக அமைத்துத் தரப்பட்ட விளையாட்டு மைதானம், மட்டைப்பந்து, கைப்பந்து, எரிபந்து விளையாட்டி திடல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசுக்கல்லூரி முதல்வர் மரு.சீதாலட்சுமி, கலசலிங்கம் ஆனந்தம் அம்மாள் அறக்கட்டளையின் தலைவர் மரு.க.ஸ்ரீதரன், அறக்கட்டளை உறுப்பினர் மரு.எஸ்.அறிவழகி, அருள்மிகு கலசலிங்கம் மருந்தக கல்லூரியின் முதல்வர் முனைவர் நா.வெங்கடேஷன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story