சேலம் முள்ளுவாடி கேட் மேம்பாலம் திறப்பு

சேலம் முள்ளுவாடி கேட் மேம்பாலம் திறப்பு

 சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் மேம்பாலம் இன்று திறக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.  

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் மேம்பாலம் இன்று திறக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ரூ.129 கோடியே 20 லட்சத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மேம்பாலத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான முள்ளுவாடி கேட் ரெயில்வே மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. மேலும், சேலத்திற்கு நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான மேம்பாலப் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் பொன்னமாபேட்டை ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. முள்ளுவாடி கேட் மேம்பாலம் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள முறையில் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து மேம்பாலம் அருகில் அமைந்து உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் மேயர் ராமச்சந்திரன், எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, துணை மேயர் சாரதாதேவி, முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். சிவலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, அஸ்தம்பட்டி மண்டலக் குழுத் தலைவர் உமாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story