கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: நகர் மன்ற தலைவர் வரவேற்பு

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: நகர் மன்ற தலைவர் வரவேற்பு

மாணவர்களை வரவேற்ற நகர்மன்ற தலைவர் 

சாரணார்பாளையத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கபட்ட நிலையில் நகர் மன்ற தலைவர் மாணவிகளை வரவேற்றார்.

சாணார்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சூரியம்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு வரவேற்பு அளித்தார்.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா பள்ளி பாடப் புத்தகங்களை வழங்கினார்.வளாகத்தில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனையும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார். இதில் ஆதார் கார்டு இல்லாத பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆதார் கார்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு,

நகர் மன்ற உறுப்பினர்கள் விஜய பிரியா,செல்வி, சினேகா,மகேஸ்வரி,திவ்யா ரவிக்குமார்,செல்லம்மாள், பள்ளி தலைமை ஆசிரியைகள் வசந்தி, சுகந்திஆகியோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story