காளையார்கோவிலில் மாணவியர் விடுதி புதிய கட்டிடம் திறப்பு

காளையார்கோவிலில் மாணவியர் விடுதி புதிய கட்டிடம் திறப்பு

புதிய கட்டிடம் திறந்து வைப்பு

காளையார்கோவிலில் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவியர் விடுதி புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவியர் விடுதி புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சிவக்குமார், ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story