ராமநாதபுரம்: பொதுமக்களுக்காக பயணிய நிழற் குடைத் திறப்பு

ராமநாதபுரம்:  பொதுமக்களுக்காக பயணிய நிழற் குடைத் திறப்பு
ராமநாதபுரம் பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் 7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழல் குடையை பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி திறந்து வைத்தார்.

ராமநாதபுரம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திரு உத்தரகோசமங்கையில் ரூ 7 லட்சம் செலவில் யாதவர் குடியிருப்பில் பயணிகள் நிழற்குடையை நாடாளுமன்ற உறுப்பினர் எம். பி நவாஸ்கனி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.பிறகு அங்கு பொதுமக்களிடம் சென்று வேறு ஏதாவது செய்ய வேண்டுமா அல்லது வேறு ஏதும் குறைகள் இருக்கிறதா என்பதை பொதுமக்களிடம் கேட்டிருந்தார்.

பிறகு குடிநீர் நன்றாக கிடைக்கிறதா போதுமான அளவுக்கு குடிநீர் காவிரி கூட்டு குடிநீர் மூலம் வழங்கப்படுகிறதா என்பதையும் பொதுமக்களிலும் பேசினார்.இதில் அப்துல் ஜப்பார், திருப்புல்லாணி யூனியன் சேர்மன் புல்லானி மற்றும் யாதவர் குடியிருப்பில் உள்ள பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்

Tags

Next Story