கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
![கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு](https://king24x7.com/h-upload/2024/01/07/354205-image3a1000167040.webp)
பாசனத்திற்காக நீர் திறப்பு
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2 ஆம் போக புன்செய் பாசனத்திற்காக இன்று முதல் விட்டு விட்டு மொத்தம் மே1 தேதி வரை 115 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2500 கன அடி வரை திறக்கப்படும் திருப்பூர் ஈரோடு கரூர் மூன்று மாவட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1.3 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனவசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story