வேலூர் மாநகராட்சி 50-வது வார்டில் தண்ணீர் பந்தல் திறப்பு

வேலூர் மாநகராட்சி 50-வது வார்டில் தண்ணீர் பந்தல் திறப்பு

நீர் மோர் பந்தல் திறப்பு 

சங்கரன் பாளையம் பகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

கோடை வெயிலில் பொதுமக்கள் தாகத்தை தணிக்கும் வகையில் வேலூர் மாநகராட்சி 50-வது வார்டில் நியூ சங்கரன்பாளையம் ரோட்டில் உங்கள் மீனவன் கடை உரிமையாளர் பிரதாப் மற்றும் 50-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் அருணா விஜயகுமார் ஆகியோர் இணைந்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.

பின்னர் அவர்கள், பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர், மோர், நீர் ஆகியவற்றை வழங்கினர். இந்த மாதம் முழுதும் தண்ணீர் பந்தலில் மோர், நீர் ஆகியவை வழங்கப்பட உள்ளது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக 50-வது வார்டு அ.தி.மு.க. வட்ட செயலாளர் சி.கே.ஜி.விஜயகுமார் கலந்து கொண்டார்.

Tags

Read MoreRead Less
Next Story