கீழ்பென்னாத்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு!

கீழ்பென்னாத்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு!

 தண்ணீர் பந்தல்

சோமாசிபாடி பேருந்து நிலையம் எதிரில் ஒன்றிய செயலாளர் சி.தொப்பளான் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிபாடி பேருந்து நிலையம் எதிரில் ஒன்றிய செயலாளர் சி.தொப்பளான் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர் மோர், இளநீர், தர்பூசணி, முலாம்பழம் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story