மதுரவாயிலில் தண்ணீர் பந்தல் திறப்பு

மதுரவாயிலில் தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு

செங்கல்பட்டு மாவட்டம், மதுரவாயில் தண்ணீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-148, நெற்குன்றம், மேட்டுக்குப்பம், N.T.படேல் சாலை, பெரிய தாங்கல்கரை அருகில் வட்ட கழக செயலாளர் S.ரமேஷ்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

பொது மக்களுக்கு தர்பூசணி பழம், பழரசம், மோர் ஆகியவற்றை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தயாளன், மாவட்ட பிரதிநிதி சு.இரவி, வட்ட கழக துணை செயலாளர்கள் அசோக்குமார், சசிகலா, பொருளாளர் தனக்கோடி, பகுதி பிரதிநிதிகள் ராமசந்திரன், மதன்ராஜ், ராஜேந்திரன், திருநாவுக்கரசு, பாலமுருகன், இரா.வடிவேல், அரசி ராஜேந்திரன், மருத்துவ அணி அமைப்பாளர் சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story