வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் நீர் மோர் பந்தல்

வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் நீர் மோர் பந்தல்
நீர் மோர் பந்தல் திறப்பு
தென்காசி மாவட்டத்தில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலில் கோடைகாலம் முழுவதும் பொது மக்களுக்களின் தாகம் தணிக்க இலவச நீர், மோர் பந்தல் திறக்கப்படும் என வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி கூறியிருந்தார்.

அதன்படி முதற் கட்டமாக வாசுதேவநல்லூர் பேரூராட்சி, புளியங்குடி நகராட்சி, சேர்ந்தமரம் பேரூராட்சி, சுரண்டை நகராட்சி, மத்தளம்பாறை குணராமநல்லூர் ஊராட்சிகளில் இன்று நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் அனைத்து இடங்களிலும் கோடைகாலம் முழுவதும் தினசரி குடிநீர் மற்றும் மோர் வழங்க ஏற்படு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பவுண்டேஷன் தன்னார்வலர்கள் இராமர், இராம்குமார், சண்முகராஜ், சண்முகசுந்தரம், மகேந்திரன், பாக்கியராஜ், முருகன், அருணாசலம், குமார், முத்துச்செல்வம், ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story