சொர்க்கவாசல் திறப்பு!

சொர்க்கவாசல் திறப்பு!

 திருப்பத்தூரில் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா விமரிசையாக நடந்தது. 

திருப்பத்தூரில் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா விமரிசையாக நடந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும்பழமை வாய்ந்த கஜேந்திர வரராஜ பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறப்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷங்கள் எழுப்பி தரிசனம். திருப்பத்தூர் மாவட்டம் கோட்டை தெரு பகுதியில் அமைந்துள்ள மன்னர் காலத்தில் கட்டப்பட்டுள்ளமிகவும் பழைமை வாய்ந்த கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது . இந்த சொர்க்க வாசல் வழியாக வந்து பெருமாளை பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா என்று கோஷம் முழங்க வழிபட்டனர். மேலும் இந்த மிகவும் பழமையான கோயில் என்பதால் சொற்க வாசல் திறப்பு விழாவில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

Tags

Next Story