புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஆட்சியர் தங்கவேல்,எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்து வைத்தனர்.

புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஆட்சியர்,எம் எல் ஏ திறந்து வைத்தனர். கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட,மணவாடி ஊராட்சி அலுவலகம் ஏற்கனவே சிறிய அளவில் இருந்ததால் புதிய அலுவலகம் வேண்டி பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் 23.57 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் கிருஷ்ணாயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி ஆகியோர் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர். ஊராட்சி தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த அலுவலகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடங்கிய நூலகம், அலுவலகத்திற்கு மாற்று திறனாளிகள் வந்து செல்ல பிரத்யோக பாதை, அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கிய 18 கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

Tags

Next Story