ஜிப்சம் கம்பெனியில் வெப்பம் தாங்காமல் ஆப்ரேட்டர் சாவு

ஜிப்சம் கம்பெனியில் வெப்பம் தாங்காமல் ஆப்ரேட்டர் சாவு

தூத்துக்குடியில் ஜிப்சம் கம்பெனியில் ஆப்ரேட்டர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தூத்துக்குடியில் ஜிப்சம் கம்பெனியில் ஆப்ரேட்டர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பண்டாரம்பட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜேந்திரன் (53) இவர் சிப்காட் வளாகத்தில் உள்ள ஜிப்சம் கம்பெனியில் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று ஜிப்சம் தயாரிப்பதற்காக பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது விறகுகள் சரிந்து விழுந்ததில் அதிலிருந்து வெப்பம் இவர் மீது தாக்கியது. இதில் உடம்பு முழுவதும் வெந்த நிலையில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story