கல்வி நிறுவன வளாகங்களில் கண்காட்சிக்கு எதிர்ப்பு

கல்வி நிறுவன வளாகங்களில்  கண்காட்சிக்கு எதிர்ப்பு

கோப்பு படம் 

கல்வி நிறுவன வளாகங்களில் வணிக ரீதியிலான கண்காட்சிகளை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது அது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

கல்வி நிறுவன வளாகங்களில் வணிக ரீதியிலான கண்காட்சிகளை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது அது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்,

கல்வி நிறுவனங்களில் கல்வி சாராத கூட்டங்கள், நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்தக் கூடாது எனவும், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த வேண்டும் எனவும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை என திருப்பூரைச் சேர்ந்த பரத் என்பவர் தொடர்ந்தவர் கல்வி சாராத இதுபோன்ற கண்காட்சிகளால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story